பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Tamil Birthday Kavithai
Tamil Birthday Kavithai

1. Tamil Birthday Kavithai

Kurinji Poopathu 12 Varshathukku Oru Muraiyam
Yaar Sonnathu Aanduku Oru Murai Yendru
Pookirathu Athu Unathu Pirantha Naal.

2. Tamil Birthday Kavithai

Indru malarntha kodi rojakal saarba 
nan unnai vazhthugiren
piranthanaal vazhthukal.

3. Tamil Birthday Kavithai 
Nilavai Kaati Soru ootuval thai…
Indro Yennavalin Birthday
Nilave vandhu ootugiral birthday cake..
Happy Birthday chellam.

4. Tamil Birthday Kavithai 
unakku vazhthu solla
puthithaai piranthathu
neeya illai nana
puthithai yosithu yosithu
pirakavillai kavithai

நட்பா? காதலா?


நட்பு பெரிதா ? காதல் பெரிதா ? 
நண்பன் கேட்டான் 

நான் முதலில் கற்றுக் கொண்டது 
நட்பு தான் 

நான் இது வரையில் காத்து வருவது 
நட்பு தான் 

என்னை நானாக பார்த்தது 
நட்பு தான் 

ஒரு குழந்தையின் கனவு

மிதுன் அத்தனை சேட்டைகளையும் செய்து விட்டு இப்போது தூங்குவதற்காக மெத்தையில் புரண்டு கொண்டிருக்கிறான். வழக்கம் போல கண்ணை மூடுடா என்று சொன்ன அம்மாவுக்கு தூக்கம் வரலாமா என்று பதில் சொன்னான் . அம்மா மிதுன் கண்ணை மூடி கொள் அம்மா கதை சொல்கிறேன். 

ஒரு அழகான கிராமம் பச்சை பசேல் என்று இருந்தது . கண்ணுக்கு அத்தனை குளிர்ச்சியும் அழகும் பார்த்தாலே . உனக்கு தெரிகிறதா என்றாள் அம்மா. ம்ம் என்றான் அரைக்கண் போட்டபடி அவன் . இரவு நேரம் . அந்த ஊரில் அழகிய சிறுமி ஒருத்தி இருந்தாள். பேரு என்னமா என்றான் . 

மிலா என்றாள் அம்மா. ம் அம்மா சொல்றதெல்லாம் கற்பனை பண்ணி பார்க்க தொடங்கிருந்தான் அவன் . அவன் கண்களில் அவள் பச்சை பட்டாடை உடுத்தியிருந்தாள். 

நட்பு கவிதை -friendship quotes

நட்பு கவிதை -friendship quotes


Top Friends Kavithai

1. Friends Kavithai

Nanba
Kangal kooda kavithai pesum un
paarkaiyil....!!!
But
Kavithai kooda kanner sinthum
unnai pirigaiyil!!!!

2. Friends Kavithai
Uyirai
Sumakkaamal
Unavai
Sumakkum
Karuvaraikkuu
Peyarthan
"NATPU"

3. Friends Kavithai
Unnai nee nesipathai vida un
natpayum nanbanayaum nesi.... Un
valkayai nee nesipai....

4. Friends Kavithai
Unnodhu sernthu seritha ithamana
natgal enrum en kanngalil kanavaga
VARUM NERANGALIL KANNIRAGA ...

கதை :முகம்

முகம் 



இதோ, இப்போது தொட்டு விடலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால் நெருங்க நெருங்க தூரம் போய்க் கொண்டே இருந்தது வானம். அது யாரின் கை என்று தெரியவில்லை. அவன் மேல் நோக்கிதான் பார்க்கிறான் . அவன் கையை பிடித்து அவனை மேலே மேலே, மேலே தூக்கிக் கொண்டு போவது மட்டும் யாரெனத் தெரியவேயில்லை.....உடலில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும், சில்லிட்டு போகச் செய்யும் ஆனந்த பூங்காற்றும், அவனை எடை இழக்க செய்தது .....தன்னை ஒரு சருகாக உணர்ந்தான். அங்கே ஓர் இலையுதிர்ந்த மரம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது.. அந்த மரமே, வானத்தின் தொடக்கமாக இருக்கும் என்ற அவனின் கற்பனை அவனை, ஒரு வித மாயத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது.....ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் காட்சியை அவனால் நன்றாக உணர முடிகிறது..மூச்சு வேக வேகமாக உள்ளிழுக்கப்பட்டு, தட்டுத் தடுமாறி, உடல் நடுங்கி, வியர்த்து, தலை சுற்றுவது போல் உணர்ந்து......... 

பிடித்து தூக்கி சென்ற கை, சட்டென தன் பிடியை தளர்த்த, இலையுதிர்ந்த மரம் நோக்கி பறந்து கொண்டிருந்தவன் மைக்ரோ வினாடியில் படுக்கையில் கிடந்தான்.....வேக வேகமாய் மூச்சு வாங்கியது.... சட்டென திறந்த விழிகள் திரு திருவென வெற்றிடங்களை வரி வரியாய் ஆராய்ந்தது..... 

எது நிஜம்? ...... தூங்கியதா... பறந்ததா !.... பறக்கும் போது தூங்கியது தெரிந்ததே.......தூங்கிய போதும் பறந்தது தெரிந்ததா?....... யோசிக்க யோசிக்க சிறுநீர் கழிக்கத் தோன்றியது... மெல்ல எழுந்தான்.. உடம்பெல்லாம் ஏதோ வலி. புதிய புதிய சிந்தனைகள், அவனுக்குள் ஒரு காட்டாறை புரட்டிக் கொண்டிருந்தது..... மெல்ல எழுந்தவன் கழிவறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்... கண்ணில் ஏதேச்சையாக, அவன் அறையில் வைக்கப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடி தென்பட்டது. பார், உற்றுப் பார் என உள்ளுணர்வு சொல்வதாக ஒரு உணர்வு ஏற்பட, உற்றுப் பார்த்தான்... அவனின் முகத்தை உற்று உற்று பார்த்தான்.. பார்த்துக் கொண்டேயிருந்தான்..... 

மனிதனின் மிகப் பெரிய ஆபத்தான கண்டு பிடிப்பான, அந்த நிலைக் கண்ணாடியில் அவனின் பிம்பம் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தது..... அது வெறும் பார்வை அல்ல.. அது தேடல்... எங்கே அந்த சிறகு... அந்த இலையுதிர்ந்த மரம், கடைசியாக கை நழுவும் நேரத்தில் சொன்ன நினைவுகளை கண்ணாடிக்குள் தேடியதாக, அவனின் முக பாவனை இருந்தது..... அமைதியாக பார்த்துக் கொண்டேயிருந்தான்....... 

பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவனின் தம்பி ராமை, என்னடா, போட்டோவை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நெற்றி சுருக்கி யோசிக்க வைத்தது..... 
ராம், இங்க வா.. என்றான் அவன்..... 

ராம் வந்தான்..... 

' என்ன என்பது போல பார்த்தான்' 

அவன் போட்டோவில் இருந்து பார்வையை திருப்பாமல் போட்டோவில் இருப்பது யார் என்று கேட்டான்..... 

'சரியாப் போச்சு' என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு...... போடாங்.......... கொய்யால ...... அவனவனுக்கு, டெஸ்ட் சைக்கிள் டெஸ்ட், மிட் டெர்ம்னு உயிர் போற வேல எவ்ளோ இருக்கு என்று தொடர்ந்த ராம், அவன் போட்டோவப் பார்த்துட்டு அவனே யார்னு கேக்கறான் என்று முணங்கியபடியே பள்ளி செல்ல வெளியேறினான்..... 

அடுத்து அம்மா வந்தாள் ....பையனின் எப்போதும் போலானதொரு விளையாட்டு என்றே முதல் பார்வையை வீசினாள் .... 
மெதுவாக, ஆனால் அழுத்தமாக கேட்டான்..... அம்மா அந்த போட்டோல இருக்கறது யாரு? 

என்னாச்சு தேவன்... ஏன் காலையிலேயே கடுப்படிக்கற......? 

அது யாருன்னு சொல்லும்மா.. எனக்கு தெரிஞ்சாகனும்.....தேவனின் வார்த்தைகள் பற்களுக்குள் சிக்கி தடுமாறி குழப்பத்திற்கான ஆரம்பமாய் நெளிந்தது... 

அட.... லூசுப் பயலே..... அது நீ தாண்டா .. என்றபடியே சமையலறைக்குள் செல்ல முற்பட்டவளை மீண்டும் அழைத்தான்.... 

அம்மா, என்னாச்சும்மா உனக்கு? அது நானா.... நல்லா பார்த்து சொல்லும்மா.. அது நானா?????? 

தேவனின் முகம் யோசித்தபடியே தடுமாறியது...... 
இவன் விளையாடரானா இல்லை நிஜமாகவே ஏதாவது பிரச்சனையா.... என்ன இப்படி குழப்பறான்...... 
சமையலறைக்குள் செல்வதை விட்டு விட்டு தேவனின் அருகே வந்தவள்..... ' என்ன ஆச்சுடா .. உடம்பு ஏதும் சரியில்லையா'.. என்றாள் . உள்ளுக்குள் ஒரு வித பயம் பந்து உருட்டத் தொடங்கியிருந்தது..... 

ஐயோ..... அம்மா... எனக்கு ஒண்ணும் இல்ல..... இந்த போட்டோ புதுசா இருக்கே.... அது தான் யாருன்னு கேட்டேன் என்றான் இயல்பாக..... 

இல்லை..... கண்டிப்பாக தேவன் விளையாடவில்லை...... அவனின் போட்டோவைப் பார்த்து யார் என்று கேட்பது விளையாட்டு இல்லை என்பதை உள்ளம் உணர.....பாதங்களில் நடுக்கம் வரத் துவங்கியது அம்மாவுக்கு....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தேவன் விளையாடாத..... காலேஜ்க்கு நேரமாச்சு... கிளம்பு என்று சொல்லி விட்டு வேக வேகமாய் சமையலறைக்குள் சென்று, சட்டென திரும்பி ஒளிந்து நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று கவனிக்கத் துவங்கினாள் .... 

தேவன், தன் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தான்.. இடப் பக்கமிருந்த நிலைக்கண்ணாடியிலும் தன்னைப் பார்த்தான்.....மாறி மாறிப் பார்த்தான் பின் கத்தினான்.... அம்மா இங்க வா.... அம்மா...... 
மீண்டும் அவன் கத்துவதற்குள், இது ஏதோ விபரீதம் போலதான் எனபதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டே அவனருகே வேக வேகமாய் வந்தாள் .... 
என்னடா.. ஏன் இப்படிக் கத்தற .. என்றாள் இயல்பாக இருப்பது போல....அவளின் உள்ளம் தாறுமாறாக தடுமாறிக் கொண்டிருக்க, கண்களில் அனிச்சையாக அவனின் போட்டோவும், கண்ணாடியும் விழுந்து கொண்டிருந்தது..... 

அம்மா.... புரிஞ்சுக்கோ....ஆமா நீ ஏன் இப்படி நடுங்கற... உனக்கு என்னமோ ஆயிடுச்சு.. அது என் போட்டோன்னா, கண்ணாடியில தெரியிறது யாரோட முகம்.. பாரு என்றான்......கண்ணாடியை காட்டி.... 

மெல்ல கண்ணாடிக்குள் பார்த்தாள் ... 
' என்னடா உளர்ற... கண்ணாடியிலையும் நீதாண்டா தெரியற...' விட்டால் அழுது விடுவாள் போல.... 

ம்ம்..... இது தான் சரி...... கண்ணாடிலதான் நான் தெரியறேன்... அது தான் என் முகம்....இந்த போட்டோல இருக்கறது என் முகம் இல்ல என்றான் அழுத்தமாக.... 

தேவன், அடி வாங்க போற... இந்த போட்டோவ உனக்கு நினைவில்லையா.... அதுல இருக்கறது நீயில்ல இல்ல ...... என்ன கதை விட்டுட்டு இருக்கறயா ...ம்..... கண்கள் கலங்கியபடியே அம்மா மிரட்ட.... மாறி மாறி பார்த்தவன், தலையைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான்....தேவன்.... 

போட்டோல இருக்கற தன் முகத்தை யாருன்னு கேக்கரான்னா, கண்ணாடியில தெரியிற அவனுடைய முகம் வேற ஒருத்தரோட முகமாத்தான் இருக்க முடியும்.... அதாவது, தன் முகத்தையே மறந்து வேறொரு முகத்தை தன் முகமா அவனோட மனசும் மூளையும் நினைக்குது....அந்த முகம் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியுது.... இப்போதைக்கு அவன் நினைக்கற, பாக்கற முகத்தையே நாமளும் பார்க்கற மாதிரி அவன்கிட்ட காட்டிக்கணும்.. இது சயின்ஸ்ல..... 

டாக்டர், அவர் முகம் போன போக்கில் பாவனைகளோடு, தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க... 

அம்மா... மனக்கண்ணில் , காலையில் , தேவன், தன்னை,இதுதான் தான் என்று கண்ணாடியில் காட்டிய அந்த பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்...அதுவும் அவன் தானே.... 

இன்னும் இன்னும் ஆழமாக ஆழமாக... உற்று உற்றுப் பார்த்தாள் ...தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள் .... 

நாட்கள் நகரத் தொடங்கியது.. 

ஒரு நள்ளிரவில் கண்ட கனவில், இலையுதிர்ந்த வான மரத்திலிருந்து ஒரு சருகு மெல்ல மெல்ல காற்றின் கைகளில் தவழ்ந்து தவழ்ந்து அவள் வயிற்றில் விழுவதாக காட்சி முடிய, வெடுக்கென மூச்சு வாங்கி எழுந்து அமர்ந்தாள் ....அவளின் கண்கள் தானாக கண்ணீரை கொட்டத் தொடங்கியது....ஆழ் மனதிலிருந்து ஒரு அழுகுரல்.... அறையெங்கும் தவழத் தொடங்கியதாக தோன்றிய ஒரு எண்ணத்தில்....... 

தேவனுக்கு முன்னால், இப்போது குழந்தை வேண்டாம் என்று கலைத்த அந்த இரண்டு மாத கருவின் உருவம் சருகாய் மிதந்தது.

ஓசை புதையும் வெளி

ஓசை புதையும் வெளி

உரக்கப் பேசுவதாய்க்
கோபப் பட்டாய்
மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்
குற்றஞ்ச் சாட்டினாய்
புணர்ச்சியில் கூட முனகல்கள்
தெருவெங்கும் இறைவதாய்
எரிச்சல் பட்டாய்
வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்
உனக்குள்
வெந்நீர்க் கொப்புளங்களையே
உருவாக்கின எப்போதும்
மெல்ல அடங்கிய என் சப்தங்கள்
புதைக்கப்பட்டன உன் வெளியில்!

கொடுமையாய் இருக்கும் என் காதல்

வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

அம்மா




அம்மாவின் அன்பு

அம்மா என்ற சொல்லே 
நானறிந்த வேதம் 
அவளின் பாதம் 
வணங்கினாலே போதும் 
தேவையில்லை வேறேதும் 
எத்தனை தெய்வங்கள் வந்தாலும் 
வரங்கள் கோடி தந்தாலும் 
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா 
அவளின் தியாக சேவைக்கு நிகராகுமா... 
பாரில் உள்ள அனைத்தும் 
அவள் பாத மண்ணுக்கு இணையாகுமா... 
அவளின்றி அமையாது இவ்வுலகம்



அம்மா

இந்திரனை பெத்தாயோ 
இல்லை 
சந்திரனை பெத்தாயோ 
சுந்தரிய பெத்தாயோ 
இல்லை 
கந்திரிய பெத்தாயோ 
அத்தனையும் தங்கமம்மா 
உனக்கு 
ஆரணங்கு சொந்தமம்மா 
கண்ணுறக்கம் கண்டாலும் 
இல்லை 
கால்வலிக்கு நொந்தாலும் 
உன்னுறக்கம் தான் தொலைச்சி 
என்னை 
உயர்வாக மதிச்சவளே 
சொல்லெடுத்து நான் படிக்க 
சோறு தண்ணி நீ மறந்த - 
நான் 
பட்டம் வாங்கி பாக்கனும்னு 
பகலிரவை நீ தொலைச்ச 
தினம் 
கூலி வாங்கி கூலு வெக்க 
நெல்லுமணி போதலையே 
தாலி வெச்ச தங்கத்தையும் 
தானமாக தந்தவளே 
பட்டம் வாங்கி வந்துவிட்டேன் 
பாச மகன் வென்று விட்டேன் 
கந்தல் துணி நீயான 
கலெக்டரென நானானேன் 
ஊருலகம் வாழுதுன்னா 
உன்னைப்போல் தாயாளே 
தியாகம் என்ற சொல்லிருந்தா 
போதாது போதாது 
அர்ப்பணிப்பு என்று சொன்னா 
ஆகாது ஆகாது 
பெத்தவள பெத்தெடுத்து 
பிறவிப் பயன் தீர்த்தால்தான் 
பெண்ணருமை கண்டுணரும் ... 
ஆண்கள் சனம் அடி உணரும்... 

மறப்பாயோ கண்ணே

அன்றோ ! 
அடிவயிற்றில் எட்டி உதைத்த மகனே 
அவ்வலியினை பேரின்பம் என்றேன்... 
வாயிற்படி இருந்து உதைக்கும் இன்றோ 
பேதை உள்ளம் வாடுதடா கண்ணே...! 

சோறு ஊட்டி வளர்த்தேன் 
என் கண்ணே ! – ஒரு கை 
சோறு போடா மறுப்பதென்ன...? 
என் கண்ணே ! 

தாலி கட்டி வந்த பெண்ணை 
தாரம் என்று ஏற்ற பிறகு 
தாயுள்ளம் மறந்ததேன்ன...? 
என் கண்ணே ! 

பாடுபட்டு படிக்க வைத்தேன் 
என் கண்ணே ! – நீயோ 
பார்க்காது போல் நடந்து செல்வதென்ன...? 
என் கண்ணே ! 

பார்கின்ற போதெல்லாம் 
பாசமாய் பார்த்தேன் 
என் கண்ணே ! – ஆனால் நீயோ 
பாநஞ்சாய் பார்பதேன்னவோ...? 
என் கண்ணே ! 


எங்கள் வீட்டு நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டி பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி

நட்பு கவிதை -friendship quotes

Tamil Friendship Kavithai


1. Tamil Friendship Kavithai

"natpu" enbathu
karumapalagai alla,
eluthi eluthi
alippatharku,
"kalvettu" pol enrume
nilaithu irukkum...

2. Tamil Friendship Kavithai
 
Neeril kulithaalum,
Neruppil Erindaalum,
Thangam niram maaraadhu.
Adhupol nee arugil irundaalum,
Tholaivil irundaalum,
Endrume en natpu maaraadhu.
 
 

3. Tamil Friendship Kavithai

Nabanaiyum nesi, Ethiriyaium
nesi.
nanban un vetrikku thunaiyai
irruppan,
Ethiri un vetrikku kaaranamai
irruppan.
 
4. Tamil Friendship Kavithai

"Viluntha Udan
Marainthu Poga
Nan Mazhai Thuli Illai
Unnudan Iruthi Varai Irukkum
Kanneer Thuli"
Its friendship...
 
5. Tamil Friendship Kavithai

“Anbai Tholaithu Adhai Thedum
Pothu Natpin Aalam Theriyathu…
Manathai Tholaithu Alumpothu
Natpai Thavira Veru Aaruthal
Kidaiyathu.!” Natpu yendrum
uyarnthathu…
 
6. Tamil Friendship Kavithai

“Elloridamum sirithu pesalaam….!
Aanal,Manasuku pidatha
oruvaridam thaan oruvaridam
thaan azhuthu peasa mudiyum…!”
That is Real Friendship…!
 
7. Tamil Friendship Kavithai

Natpu Enpathu Road la kidakura
Rupa Note Mathiri.
Tholachavan feel Pannuvan,,
kidachavan Enjoy pannuvan.,
Don't mis ur friends.
 
8. Tamil Friendship Kavithai

Punakai ennum mugavari
nammidathil irunthal,
Nanbargal ennum
kaditham nammai thedi
varum.
 
9. Tamil Friendship Kavithai

Vittu pidipathu natpalla,vittu
koduppathu natpu..!Vittu
kodupathu mattum natpalla,kadaisi
varai vittu vilagamal
iruppathuthaan unmaiyana natpu!!!
 
10. Tamil Friendship Kavithai

Natpu enbathu kangalai vittu
pirinthu sellum kanneer thuligal
alla- athu ,kangalodu irukkum karu
vizhigal. 
 
 
 
 
     

காதல்


காதல்

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.

எங்கள் வீட்டு பூனை

எங்கள் வீட்டு பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
தாவி எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக் குடிக்கும்
நாவால் முகத்தைக் குடிக்கும்
நாற்காலியின் கீழ் படுக்கும்

உன் காதல் மட்டும்



உன் காதல் மட்டும்

பனைமட்டையில்
மழை பெய்தாற்போல
பேச்சுப்பழக்கம்
உனக்கு
எப்படி
ஊமையைப் போல
மௌனித்திருக்கிறது
உன்
காதல் மட்டும்.

அணிலே அணிலே

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்

காதல் பழக வா

காதல் பழக வா

காதல் பழக வா-28
காதல் பழக வா

உன் மீதான காதலை 
சுமந்து கொண்டு 
உன்னை தேடி வருகிறேன்... 
என் மீதான காதலை 
எனக்காக வளர்த்துக்கொள் காதலியே... 
உன் கரம் பற்றி 
அழைத்துச்செல்லவே நாட்களை 
எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன் 
இப்படிக்கு உன் காதலன்... 

"அக்கா.....அக்கா..." 

"என்னடி, சும்மா அக்கா அக்கானு பின்னாடியே சுத்திட்டு இருக்க, ஒரு இடத்துல போய் உட்கார வேண்டியது தானே, இப்டியே ஓடிக்கிட்டே இருந்தா கால் வலிக்காதா" 

"அப்டிலாம் உன்ன விட்டுட்டு உட்கார முடியாது,அப்போ நீயும் கூட இரு, நான் ஒரு இடத்துல உட்கார்ந்துக்கறேன்" 

"ஏய் வாலு, இன்னைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க, அதான் நானும் என்னால முடிஞ்ச வேலைய செஞ்சிட்டு இருக்கேன், கல்யாணம் பண்ண பின்னாடி நாமளும் எல்லா வேலையையும் செஞ்சி கத்துக்கணும், அதைவிட்டுட்டு சின்ன பிள்ளையோட உட்கார்ந்த நல்லவா இருக்கும்" 

"அப்போ நான் சின்ன பிள்ளையா" 

"பின்ன இல்லையா, நீ சின்ன பிள்ளை தான்" 

"போக்கா, உனக்கு எப்பவுமே நான் சின்ன பிள்ளையா தான் தெரிவேன், எனக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு" 
"இங்க முகத்தை காட்டு, என் தங்கச்சிக்கு கல்யாண வயசு வந்துடுச்சாமே, நானும் அத கொஞ்சம் பார்க்கறேன்...." 

"போக்கா, இப்டிலாம் பார்க்காத, எனக்கு வெட்க வெட்கமா வருது" 

"என் மதுவுக்கு வெட்கம்லாம் வருதாமே, இத யார்கிட்ட சொல்வேன், ஊரை கூட்டி தண்டோரா போட்ற வெட்டியது தான், என் மது வெட்கபட்டுடான்னு" 

"என்னை கிண்டல் பண்ணது போதும்க்கா, நம்ம வீட்டுக்கு யார் வர்றா, அத சொல்லவே இல்லையே" 

"அதான் சொல்லிட்டல்ல, உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுனு, உன்ன பொண்ணு பார்க்க மாப்ள வீட்ல இருந்து வர்ராங்க, மாப்பளைய பிடிச்சிருக்குனு சொல்லிடு, சீக்கிரம் கல்யாண தேதியை குறிச்சிடலாம், " 

"அக்கா, உன் கிண்டல நிறுத்தவே மாட்டியா, நீ சொல்லாத போ, நான் மாமாகிட்ட கேட்டுக்கறேன், இனி உன் பின்னாடி சுத்தவே மாட்டேன், என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்கல்ல, போ" 

"இனி நீ எங்க என் பின்னாடி சுத்த போற, உன்னோட ராஜகுமாரன் பின்னாடி தானே சுத்துவ" 

"இனி இங்க நின்னா அவ்ளோ தான், நான் மாமாகிட்ட கேட்டுக்கறேன், நீ உன் வேலைய பாரு" என்று கூறிக்கொண்டே ஓடியவளை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் ராதி... 

ராஜகுமாரன் என்றதும் ராமின் நினைவு வந்தவளுக்கு அவனை பற்றி யோசித்ததும் வெட்கமும் வந்துவிட்டது, என்னவோ அவன் நினைவும் குரலும் அவள் மனதை குறுகுறுத்து கொண்டே இருந்தது... 

"எதுக்கு இப்படி க்ளாஸ் எடுக்கற, என்னவோ நான் கண்ணன் வீட்டுக்கே போகாதவ மாதிரி இல்ல நடத்துக்கற, அங்க என்ன பேசணும், எப்படி பேசணும்னு எனக்கு தெரியாதா, நீ பேசறது பண்றதெல்லாம் எனக்கு வித்தியாசமா இருக்கே" 

"அம்மா அதில்ல, நீங்க பாட்டுக்கு அங்க போய்ட்டு கல்யாண பேச்செடுத்திங்கனா அது சங்கடமா போய்டும், இப்டி பொண்ணு பாரு, இந்த மாதிரி பொண்ணு இருக்கணும்னு நீங்க பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பிங்க, அங்க இருக்கற நிலைல என்னோட கல்யாண பேச்சி வேற மாதிரி விளைவு ஏற்படுத்தும், அதான் சொல்றேன், புரிஞ்சிகோங்கமா" 

"சரிடா, உன் கல்யாணத்த பத்தியே பேசல, போதுமா" 

"அப்படி ஒரேடியா விட்றாதீங்க, நான் சொல்லும்போது பேச ஆரம்பிச்சா போதும்" 

"இதுவேறயா, சரி இப்போ கிளம்பலாமா, இல்ல வேற எதாவது சொல்லனுமா" 

"அதெல்லாம் ஒன்னும் இல்லை, இப்போ கிளம்பறது மட்டும் தான் பாக்கி" 

ராம் ஏதேதோ கனவுகளோடு கண்ணன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான், மதுவும் தன் எதிர்கால கனவுகளோடு அந்த வீட்டில் உலவிக்கொண்டிருந்தாள்...இருவரும் சந்தித்துக்கொள்ளும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... 

"ராதி விருந்துலாம் ரெடி ஆச்சா, ராம் வர நேரம் ஆச்சி" 

"எல்லாமே ரெடியா இருக்குங்க, நீங்க போய் ஹால்ல வெயிட் பண்ணுங்க, நான் இங்க பாத்துக்கறேன்" 

"அண்ணா, ராம் அண்ணா வந்துட்டாங்க" 

"இதோ வேறேன்மா, ராதி நீயும் கூட வா, ராம் அம்மாவை நீ இன்னும் பார்த்ததில்லையே" 
ராமையும், அவன் அம்மாவையும் ஒட்டு மொத்த குடும்பமும் பாசத்தோடு கவனிக்க ராம் திக்குமுக்காடி போனான்... 
"என்னடா இது, என்னவோ புதுசா வந்த விருந்தாளி மாதிரி கவனிக்கற, நான் தினமும் தான் உன்ன பார்க்கறேன், இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல" 

"இது உனக்காக இல்ல, அம்மாக்காக..அம்மா எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான், உனக்குன்னு தப்பா நினைச்சிக்காத" 

"அப்டியா, அப்போ எனக்குலாம் ஸ்பெஷல் எதுவும் இல்லையா, சரி தான், நண்பனை பார்க்கணும்னு உன்ன தேடி வந்தேன் பாரு... என்ன சொல்லணும், ராம் உனக்கு இதெல்லாம் தேவை தானா" 

"அண்ணா, கண்ணன் அண்ணன் சும்மா பொய் சொல்லுது, உனக்காகவும் தான் எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சது, இப்போ உங்கிட்ட ஆக்ட் குடுக்குது" 

"ஏய் வாலு, நீ யாரு சைட்" 

"நான் எப்பவும் உண்மையோடு சைட் தான்" என்று முகபாவத்தோடு சொன்னவளை பார்த்து அத்தனை பேரும் சிரித்துக்கொண்டிருக்க ராம் தன் காதல் தேவதையை தேடிக்கொண்டிருந்தான்... 

"அண்ணா, மதுவை காணோமே, நான் போய் கூட்டிட்டு வரேன்" 

"ஆமா, அவ தான் கெஸ்ட் யாருனு கேட்டுட்டே இருந்தா, முதல்ல கூட்டிட்டு வா, இல்லனா அப்புறம் யாரையும் உட்கார விடமாட்டா, ஏன் என்னை கூப்பிடலைனு கச்சேரி வச்சிருவா" 

ராமிற்கு இப்போது தான் அண்டார்டிக்காவின் பனிக்கட்டி மனதிற்குள் சில்லிட துவங்கியது, அவளை பார்க்கும் ஆவல் மேலும் அதிகமானது.... 

"அம்மா , என் மனைவியை நீங்க இன்னும் பார்த்ததில்லையே...இவங்க தான் ராதி, இவங்க தான் உங்களுக்க ஸ்பெஷலா சமைச்சிருக்காங்க, சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க, என் செலெக்க்ஷன் பெஸ்ட்டா இல்லையானு" 

"கண்ணன் செலக்ஷனை சொல்லவா வேணும், எப்பவும் நீ சரியா தானே முடிவெடுப்ப, அந்த நம்பிக்கைல தான் சூழ்நிலை சரியாகட்டும்னு வராம இருந்துட்டேன், ராம் கூட நான் சொல்ற வரைக்கும் இதப்பத்தி எதுவும் பேசிக்க வேணாம்னு சொல்லிட்டான், ஆனாலும் நினச்சா மாதிரியே உன் செலக்ஷன் சூப்பர் தான்பா, நான் வந்ததும் என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினப்பயே புரிஞ்சிடுச்சு" 

"அம்மா, இவ்ளோ சீக்கிரம் முடிவெடுக்காதிங்க, அப்புறம் என்ன மாதிரி பீல் பண்ண வேண்டியது வரும்" என்று கண்ணன் கிண்டல் செய்யவும் ராதி கண்ணனிடம் 'உள்ள வாங்க பேசிக்கிறேன்' என செய்கை செய்ததை பார்த்து மீண்டும் அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்... 
"அண்ணா, கண்ணனோட கல்யாணம் முடிஞ்சதும், என் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடனும், நீங்கலாம் தான் இவன் கிட்ட பேசி சம்மதம் வாங்கி தரணும்" 

"அதுல என்னமா கஷ்டம், ராம் நல்ல பையன் ஆச்சே, சொன்னா கேட்டுக்க போறான்" 

"பெரியப்பா அப்டிலாம் நினைக்காதீங்க, ராம் எங்கயோ சிக்கிட்டான், இனி நாமெல்லாம் சொன்னா அவன் கேட்பானான்றது சந்தேகம் தான்" 

கண்ணனின் பேச்சில் ராம் சற்று திடுக்கிட, கண்ணன் லேசாய் கண்ணடித்து சிரித்தான்... 

"கண்ணா நீ வேற, எதாவது சொல்லி அம்மாவை உசுப்பேத்திவிட்றாத, அப்புறம் என் பாடு திண்டாட்டம் தான்"என்று ராம் கெஞ்சவும் "கண்ணன் போனால் போகட்டும், பாவம் பார்த்து விடறேன்" என்று சிரித்தபடி ராமை மேலும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டான்... 

தன்னை சுற்றி என்ன நடந்தாலும் மதுவை பார்க்கும் ஆர்வம் ராமிற்கு குறையவில்லை... 

மதுவோ கெஸ்டை பார்க்க வந்த நேரத்தில் கண்ணன் ராமின் பேரை சொல்லிக்கொண்டு கிண்டல் செய்யவும் மதுவுக்கோ ஒரு நிமிடம் உள்ளுக்குள் ஷாக் அடித்தது... 

ராம் வந்திருக்கிறான் என்று யூகித்தவள் அவனை பார்க்கும் சந்தோஷத்தோடு அவன் எதிரில் போய் நிற்கவும் ராமும் கண்ணனின் கிண்டலை கேட்டபடி நிமிர்ந்து மதுவை பார்க்கவும் சரியாக இருந்தது... 

பார்த்த இருக்கண்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து திகைத்தது...

நட்பு கவிதை -friendship kavithai


                                                                                                                        நட்பு கவிதை
Tamil Natpu Kavithai

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Arimugam illamal vanthom,
Adikkadi pesi kondom,
uravugalukku mele, uyir aanom,
kaalangal kadanthu sendralum,
kadaisi varai thodara vendum 
Nam Natpu..!!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Thunbam nergayil thol kodupathu natpu,
udan pirappai enni anbu kaatuvathu natpu
manasthabam yer pattalum manam vittu pesuvathe natpu

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Natpu oru nalinamana kalai
vegu silare antha varapirasathathudan
piranthu irukkirargal.

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Thinam thittum appa'vin vaarthaigalai vida
thittamal nagarum nanbhan'in maunam kodiyathu :(

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Karuvarai sonthangal unnai kadal kadanthu anuppi vaithalum
kadl karaiyil kaathu iruppen nam natpai ninaithu. :(

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Vidamal pesupavargal kadhalargal,
vittu kodukkamal pesupavargal Nanbargal.

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Vazhum varai vazhkai,
vellum varai tholvi,
virikkum varai kanner,
uthirum varai pookal,
maraiyum varai nilavu,
maranam varai nam natpu.

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

Popular Posts