பழமொழிகள் விளக்கம் - 23



1. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா?

பொருள்/Tamil Meaning:

கனவில் கண்ட சோறு பசி தீர்க்காது
கனவில் கண்டது தானாகவே நிறைவடையாது. அதற்காக உழைக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2. காலம் போகும், வார்த்தை நிற்கும்

பொருள்/Tamil Meaning:

காலம் கடந்து சென்றாலும் சொன்ன வார்த்தை நிலைக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவது.

3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

பொருள்/Tamil Meaning:

ஒற்றுமையுடன் வாழ்ந்தால் பல நன்மைகள் உண்டாகும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

4. கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்

பொருள்/Tamil Meaning:

பயன்படுத்தாத ஆயுதம் துருப் பிடித்து விடும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

5. பூனைக்கு மணி கட்டுவது யார்?

பொருள்/Tamil Meaning:

பூனையின் கழுத்தில் யார் மணியைக் கட்டுவது?
கடினமான செயலை யார் முதலில் செய்யத் தொடங்குவது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

6. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்

பொருள்/Tamil Meaning:

பொருளோ பணமோ கனமாக வைத்திருந்தால் போகும் வழியில் கொள்ளை போய்விடுமோ என்ற பயம் இருக்கும்.
தவறு செய்து இருந்தால் தான் மனம் பதறும் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

7. அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

பொருள்/Tamil Meaning:

அகலமாக உழுவதைக் காட்டிலும் ஆழமாக உழுவதே சிறந்தது.
மேம்போக்காக நிறையத் தெரிந்துக் கொள்வதை விட, ஒரு துறையை ஆழமாகத் தெரிந்து கொள்வது சிறந்தது.

8. உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது

பொருள்/Tamil Meaning:

உறவினர்களை சந்திக்காமல் இருந்தால் உறவு கெடும். அதேபோல், கொடுத்த கடனைக் கேட்காமல் இருந்தால் கிடைக்காது.

9. எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

பொருள்/Tamil Meaning:

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஒருவரின் உண்மையான குணாதிசயங்கள் யாருக்கும் தெரியாது.

10. எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?

பொருள்/Tamil Meaning:

மற்றவர்களின் வலி நமக்குத் தெரிவதில்லை என்ற பொருளில் சொல்லப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Posts