பழமொழிகள் விளக்கம் - 21


1. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?

பொருள்/Tamil Meaning:

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது.
வேண்டியதை வைத்துக்கொண்டே வெளியில் தேடும்போது.

2. சேராத இடத்தில் சேர்ந்தால் வராத துன்பம் வரும்

பொருள்/Tamil Meaning:

சேரக்கூடாத தீயவர்களுடன் சேர்ந்தால் வரக்கூடாத துன்பம் எல்லாம் வரும்.

3. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்

பொருள்/Tamil Meaning:

துன்பத்தின் வலி அவரவர்களுக்கு வரும்போது தான் புரியும் என்பதை உணர்த்தும்போது.

4. தன் முதுகு தனக்குத் தெரியாது

பொருள்/Tamil Meaning:

ஒருவர் தனக்கு பின் உள்ள முதுகைப் பார்க்க இயலாது. தன் குறை தனக்குத் தெரியாது.
சிலர் தங்கள் குறைகளை பொருட்படுத்தாமல், மாறிமாறி மற்றவர்களை குறை கூறுவார்கள்.

5. நெருப்பில்லாமல் புகையாது

பொருள்/Tamil Meaning:

உண்மை இல்லாமல் பொய் பரவ முடியாது.

6. பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி

பொருள்/Tamil Meaning:

பார்ப்பதற்குச் சாதுவாக தோன்றினாலும் செயலில் புலியாக பாய்வது
பார்ப்பதற்குப் பூனையாகவும், பாய்ந்தால் புலியாகவும் இருப்பது.

7. பொன் கறுத்தாலும் மாற்று குறையுமா?

பொருள்/Tamil Meaning:

தங்கம் கறுத்துப் போனாலும் அது தரத்தில் குறையாது.
எந்த சூழ்நிலையிலும் மேன்மக்கள் குணம் மாற மாட்டார்கள்.

8. மனம் கொண்டது மாளிகை

பொருள்/Tamil Meaning:

எந்த இடமும் மாளிகை ஆகலாம், மனம் நினைத்தால்.
மனதைப் பொறுத்து தான் இருக்கும் இடம்.

9. முன் வைத்த காலை பின் வைக்காதே

பொருள்/Tamil Meaning:

முன்னால் எடுத்து வைத்த அடியைப் பின்னோக்கி வைக்க வேண்டாம்.
தொடங்கிய செயலை முன்னோக்கி நகர்த்த வேண்டும். பாதியில் கைவிடக் கூடாது.
10. எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

பொருள்/Tamil Meaning:

எலியின் இருப்பிடமாக இருந்தாலும் அது தனியிடமாக இருக்கும்.
யாராக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியாக இருப்பிடம் வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts