பழமொழிகள் விளக்கம் - 22


1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

பொருள்/Tamil Meaning:

கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது.
அளவில் சிறியதாக இருந்தாலும் செயல்திறனில் நிறைவாக இருக்கும்.

2. தனிமரம் தோப்பாகாது

பொருள்/Tamil Meaning:

தனி மரம் தோப்பு ஆகாது.
தனி ஒருவரைக் காட்டிலும் ஒற்றுமை சிறந்தது.

3. நொறுங்கத் தின்றால் நூறு வயது

பொருள்/Tamil Meaning:

நன்றாக மென்று தின்றால் ஆரோக்கியமாக வாழலாம்.

4. அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது

பொருள்/Tamil Meaning:

பாத்திரத்தில் இருந்து அள்ளாதப் பொருள் குறையாது. வாயில் இருந்து சொல்லாத சொல் பிறக்காது.

5. அற்ப அறிவு ஆபத்துக்கு இடம்

பொருள்/Tamil Meaning:

 ஆராயாமல் செய்யும் செயல் ஆபத்தில் முடியும்.

6. ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா

பொருள்/Tamil Meaning:

நடனம் ஆடிப் பழகிய காலும், பாட்டுப் பாடிப் பழகிய நாக்கும் சும்மா இருக்காது.
ஒரு செயல் பழக்கமாகி விட்டால் அதை செய்யாமல் இருப்பது மிகவும் கடினம்.

7. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்

பொருள்/Tamil Meaning:

துன்பத்திற்கு காரணமானவர்களே துன்பப் படுபவர்களைக் கண்டு வருந்தும் போது.

8. இன்று என்பதும் நாளை என்பதும் இல்லையென்பதற்கு அடையாளம்

பொருள்/Tamil Meaning:

இன்று, நாளை என்று காரணம் கூறினால், அது இல்லை என்று சொல்வதற்கு சமம்.
காரணம் கூறி செயலை தள்ளிப்போடும் போது.

9. ஒப்புக்குச் செய்தால் உள்ளதும் கெடும்

பொருள்/Tamil Meaning:

மனமில்லாமல் ஒரு வேலையைச் செய்தால், அது இருப்பதை விட மோசமாகவே இருக்கும்.

10. கட்டிய வீட்டுக்கு எட்டு வக்கணை

பொருள்/Tamil Meaning:

கட்டிய வீட்டைக் குறை சொல்வது.
செயலில் ஈடுபடாமல் குறை மட்டும் சொல்பவரை பார்த்து சொல்வது.

No comments:

Post a Comment

Popular Posts