பழமொழிகள் விளக்கம் - 25


1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

 பொருள்/Tamil Meaning:

மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கினால், அது நொடியினில் கரைந்து விடும்.

தெரியாதவரை நம்பி ஒரு செயலில் இறங்க வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2. விதைப்பதற்குமுன் வேலி போடு

பொருள்/Tamil Meaning:

விதைப்பதற்குமுன் வேலி போட்டால் பயிரைப் பாதுகாக்கலாம்.
முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

3. உலை வாயை மூடலாம்ஊர் வாயை மூட முடியுமா?

 பொருள்/Tamil Meaning:

உலைப் பானையை மூடி போட்டு மூடி விடலாம். ஊர் வாயை மூட முடியுமா?
ஊர்மக்கள் ஏதேனும் பேசத் தொடங்கினால் அவற்றை நிறுத்த முடியாது என்ற பொருளில் சொல்லப்பட்டது.

4. கெண்டையைப் போட்டு வராலை இழு

பொருள்/Tamil Meaning:

சிறிய கெண்டை மீனைப் உணவாக போட்டு பெரிய வரால் மீனை இழு.
சிறியதாய் செலவழித்து பெரிய லாபம் பார்ப்பது.

5. துணை போனாலும் பிணை போகாதே

பொருள்/Tamil Meaning:

துணையாகப் போனாலும் பிணையாகப் போக கூடாது.
ஒருவரின் கடனுக்குப் பொறுப்பேற்கக் கூடாது.

6. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்/Tamil Meaning:

உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று பொருள் படுகிறது

7. குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!

 பொருள்/Tamil Meaning:

தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும். குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

8. தொட்டில் பழக்கம்சுடுகாடு மட்டும்.

பொருள்/Tamil Meaning:

இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக் கங்களை வளர்த் துக் கொண்டவன், இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்றார்கள். வேண்டா பழக்கத்தை ஆரம்பத்திலே வேரறுக்காவிட்டால் தீவினையாய் முடியும்!

9. களவும் கற்று மற

 பொருள்/Tamil Meaning:

நாம் சில விஷயங்கள் தவறு என்பதை அறியாமலேயே கற்கிறோம். பிறகு கற்றதில் நல்லதை மட்டும் வைத்துக் கொண்டு தீமையை முழுமையாக மறந்துவிட வேண்டும் என்பதையே இந்த பழமொழி வாயிலாக முன்னோர் நமக்கு உணர்த்துகிறார்கள்.
10. எறும்பு ஊர கல்லும் தேயும்
 
பொருள்/Tamil Meaning:

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்து கிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் சொற்பமானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்ந்து வழி உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமானதாக இருக் கும் இலக்கும் எளிமையாக கைகூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.
இளமையில் கற்று, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, உரிய காலத்தில் உரிய செயல்களைச் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்பதையே மேற்காணும் பழமொழிகள் நமக்கு கற்றுத் தருகின்றன.

1 comment:

  1. முதல் பழமொழிக்கான உங்கள் விளக்கம் முற்றிலும் தவறானது. ஆற்றில் மண் குதிர் (மண் குவியலை) ஒன்றை கண்டு ஆறு ஆழம் இல்லை என தவறாக நினைத்து ஆற்றில் இறங்க வேண்டாம் என்பதே சரிபான பொருள்.

    ReplyDelete

Popular Posts