அன்னை மாடி தாலாட்டு



அன்னை மாடி தாலாட்டு
பாலூட்டி சீராட்டி பாட்டுப் பாடி
உறங்கவைத்த
அன்னை மாடிக்கு ஈடாகாது எந்த மடியும் . 


அத்தனையும் அழகு தான் அம்மாக்களுக்கு

[] அத்தனையும் அழகு தான் அம்மாக்களுக்கு ...

முகச்சுழிப்புகளில்
அழகிழந்துவிட கூடுமென்று
வேறு யாரையும்
அள்ளச்சொல்வதில்லை
அம்மாக்கள் ..
தன்
மழலையின் மலத்தை ! 

அம்மா சொன்ன பொய்

'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*

*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

என் அம்மா

ஒவ்வொருவரும் வேதனையிலும் சாதனையிலும் உச்சரிக்க மறவாத அன்பின் மொழி

ஒரு துளி விந்து சுமந்து என்னை உயிராய் வடித்த படைப்பாளி

தான் கருவுற்ற நாள் முதல் கல்லறை செல்லும் நாள் வரை நம்மை ஓவியமாக்கத் தன்னைத் தூரிகையாக்கிய காரிகை

தன் குருதியில் கூட எனக்காக உணவு சமைத்தவள்
தன் முலைப்பாலோடு அன்பும் அறிவும் வீரமும் ஊட்டியவள்

உயிர்களை நேசிக்கச் சொன்னவள்
உறவுகளை அறிமுகப்படுத்தியவள்

என் விருப்பங்களை வடிவாக்க தன் தேவைகளை சுருக்கிக் கொண்ட தியாகி
நான் பிணிகண்டு படுத்தபோது தன் உறக்கம் தொலைத்தவள்

வான்மழை தழுவும்போது வெளியில் சென்ற பிள்ளைக்காக விண்ணை சபித்த தேவதை அவள்

ஒப்பனையற்ற அழகி அவள்

அப்பாவின் கோபக்குரல் ஒலிக்கும்போது எனக்கான ஆதரவுக்குரல் அவள்

சமையலறை டப்பாக்களில் ரகசிய வங்கி நடத்துபவள்

அவள் முகச்சுருக்கங்களைக் காணும்போதே என் கவலைகளை மரிக்கச் செய்யும் மந்திரம் அவள்

நான் காதலில் தோற்றபோதும் வாழ்க்கையில் தோற்றபோதும் தன் மடியை எனக்கு மருந்தாக்கியவள்

வைரநெஞ்சம் கொண்டவளாய் என்னை வளர்த்தபோதிலும் தன் ஒருதுளி கண்ணீரால் என்னை உருக்குலைப்பவள்

நம் வயது ஏற ஏற நமக்கே குழந்தையாய் மாறும் இயற்கையின் படைப்பு அவள்

கூடு பிரிந்து சென்றபோதும் தன் வளர்ந்த பிள்ளையின் வருகைக்காக காத்திருப்பவள்

தனது வாழ்நாள் முழுவதும் நமது சாதனைக்காக உழைத்த வாழ்நாள் சாதனையாளர்

அவள் வைத்த நெத்திலி மீன்குழம்பு மணம் இன்னும் என் நாசியில்
கூடவே அவள் வியர்வை மணத்துடன்.


தெய்வத்திருமகள்
தெய்வங்கள் பல
உன் கண்ணில்...

உன்னுடன் கோயிலுக்கு
வரும் வேளையில்
கருவறைச் சிலையிடம்
காட்டி வருகிறேன்
உண்மையான தெய்வத்தை,

எத்தவம் செய்தேனோ
உன் கருவில்
உயிராக...

கருப்பையில் உருவாக்கி
உதிரத்தால் குளிப்பாட்டி
உதைத்த உதையை
எல்லாம்
ரசித்து மகிழ்ந்து
கண்ணீரில் முகம் கழுவி
கவலைகள் தான் ஏற்று
பத்துத் திங்கள்
தவமிருந்து
பத்திரமாய் என்னை
பெற்றெடுத்தாய்...

என் பிஞ்சு விரல்
நீ பிடித்து
நெஞ்சோடு தான்
அனைத்து
உதிரத்தை உருக்கி
உயிர்ப்பால் கொடுத்து
தாலாட்டு நீ
பாட -என்
குழந்தை மனம்
தாளாது...

உன் முந்தானையில்
தலை துவட்டவே
நாள் முழுதும் நான்
மழையில் நனைகிறேன்...

உனக்கென்று இருந்த
ஆசைகள்,கனவுகள்
எல்லாம் மறைத்து
எண்ணத்தில்
என்னை வைத்து
ஏற்றத்தில்
ஏற்றி வைத்தாய்...

சினிமா,சுற்றுலா
காதல் என
நான் பெற்ற
சுதந்திரங்கள் அனைத்தும்
நீ இழந்த
சுதந்திரத்தின் எச்சங்களே

இப்பொழுதெல்லாம்
நான் உனக்கும்
சேர்த்தே சினிமாவிற்கு
செல்கிறேன் அம்மா...

பாவி என்னை
பெற்றாயே
பாச மழை
பொழிந்தாயே
எனக்காக அடுக்களைக்குள்
சிறை புகுந்து
பலியான
உன் வாழ்வை
பாசத்தால் நனைக்கிறேன்...

பண்டிகைத் திருநாள்
ஒருநாள் ,ஒருபொழுது
நீ கொண்டாடி
நான் பார்த்ததில்லை
கூடுதலாக
சில மணி நேரங்கள்
அடுக்களைக்குள்
சிறை வைக்கப்
படுவதை தவிர்த்து
வேறெதையும்
அப் பண்டிகைகள்
உனக்கு வழங்கியதில்லை,

என்னை வயிற்றில்
சுமந்ததால்
நீ இழந்த
எல்லா சந்தோஷங்களையும்
உனக்கு திருப்பித் தர
பேராசைக் கொள்கிறேன்,

உன்னை தோள்களில்
சுமப்பதன் மூலமாய்...

அம்மா உனக்கு
மறுபிறப்பு உண்டென்றால்
என் மகளா வந்துவிடு
மறுபேச்சு பேசாம...

2 comments:

  1. Delete this post, This is mine.
    தெய்வங்கள் பல
    உன் கண்ணில்...

    உன்னுடன் கோயிலுக்கு
    வரும் வேளையில்
    கருவறைச் சிலையிடம்
    காட்டி வருகிறேன்
    உண்மையான தெய்வத்தை,

    எத்தவம் செய்தேனோ
    உன் கருவில்
    உயிராக...

    கருப்பையில் உருவாக்கி
    உதிரத்தால் குளிப்பாட்டி
    உதைத்த உதையை
    எல்லாம்
    ரசித்து மகிழ்ந்து
    கண்ணீரில் முகம் கழுவி
    கவலைகள் தான் ஏற்று
    பத்துத் திங்கள்
    தவமிருந்து
    பத்திரமாய் என்னை
    பெற்றெடுத்தாய்...

    என் பிஞ்சு விரல்
    நீ பிடித்து
    நெஞ்சோடு தான்
    அனைத்து
    உதிரத்தை உருக்கி
    உயிர்ப்பால் கொடுத்து
    தாலாட்டு நீ
    பாட -என்
    குழந்தை மனம்
    தாளாது...

    உன் முந்தானையில்
    தலை துவட்டவே
    நாள் முழுதும் நான்
    மழையில் நனைகிறேன்...

    உனக்கென்று இருந்த
    ஆசைகள்,கனவுகள்
    எல்லாம் மறைத்து
    எண்ணத்தில்
    என்னை வைத்து
    ஏற்றத்தில்
    ஏற்றி வைத்தாய்...

    சினிமா,சுற்றுலா
    காதல் என
    நான் பெற்ற
    சுதந்திரங்கள் அனைத்தும்
    நீ இழந்த
    சுதந்திரத்தின் எச்சங்களே

    இப்பொழுதெல்லாம்
    நான் உனக்கும்
    சேர்த்தே சினிமாவிற்கு
    செல்கிறேன் அம்மா...

    பாவி என்னை
    பெற்றாயே
    பாச மழை
    பொழிந்தாயே
    எனக்காக அடுக்களைக்குள்
    சிறை புகுந்து
    பலியான
    உன் வாழ்வை
    பாசத்தால் நனைக்கிறேன்...

    பண்டிகைத் திருநாள்
    ஒருநாள் ,ஒருபொழுது
    நீ கொண்டாடி
    நான் பார்த்ததில்லை
    கூடுதலாக
    சில மணி நேரங்கள்
    அடுக்களைக்குள்
    சிறை வைக்கப்
    படுவதை தவிர்த்து
    வேறெதையும்
    அப் பண்டிகைகள்
    உனக்கு வழங்கியதில்லை,

    என்னை வயிற்றில்
    சுமந்ததால்
    நீ இழந்த
    எல்லா சந்தோஷங்களையும்
    உனக்கு திருப்பித் தர
    பேராசைக் கொள்கிறேன்,

    உன்னை தோள்களில்
    சுமப்பதன் மூலமாய்...

    அம்மா உனக்கு
    மறுபிறப்பு உண்டென்றால்
    என் மகளா வந்துவிடு
    மறுபேச்சு பேசாம...

    ReplyDelete
  2. Delete this post, This is mine.
    தெய்வங்கள் பல
    உன் கண்ணில்...

    உன்னுடன் கோயிலுக்கு
    வரும் வேளையில்
    கருவறைச் சிலையிடம்
    காட்டி வருகிறேன்
    உண்மையான தெய்வத்தை,

    எத்தவம் செய்தேனோ
    உன் கருவில்
    உயிராக...

    கருப்பையில் உருவாக்கி
    உதிரத்தால் குளிப்பாட்டி
    உதைத்த உதையை
    எல்லாம்
    ரசித்து மகிழ்ந்து
    கண்ணீரில் முகம் கழுவி
    கவலைகள் தான் ஏற்று
    பத்துத் திங்கள்
    தவமிருந்து
    பத்திரமாய் என்னை
    பெற்றெடுத்தாய்...

    என் பிஞ்சு விரல்
    நீ பிடித்து
    நெஞ்சோடு தான்
    அனைத்து
    உதிரத்தை உருக்கி
    உயிர்ப்பால் கொடுத்து
    தாலாட்டு நீ
    பாட -என்
    குழந்தை மனம்
    தாளாது...

    உன் முந்தானையில்
    தலை துவட்டவே
    நாள் முழுதும் நான்
    மழையில் நனைகிறேன்...

    உனக்கென்று இருந்த
    ஆசைகள்,கனவுகள்
    எல்லாம் மறைத்து
    எண்ணத்தில்
    என்னை வைத்து
    ஏற்றத்தில்
    ஏற்றி வைத்தாய்...

    சினிமா,சுற்றுலா
    காதல் என
    நான் பெற்ற
    சுதந்திரங்கள் அனைத்தும்
    நீ இழந்த
    சுதந்திரத்தின் எச்சங்களே

    இப்பொழுதெல்லாம்
    நான் உனக்கும்
    சேர்த்தே சினிமாவிற்கு
    செல்கிறேன் அம்மா...

    பாவி என்னை
    பெற்றாயே
    பாச மழை
    பொழிந்தாயே
    எனக்காக அடுக்களைக்குள்
    சிறை புகுந்து
    பலியான
    உன் வாழ்வை
    பாசத்தால் நனைக்கிறேன்...

    பண்டிகைத் திருநாள்
    ஒருநாள் ,ஒருபொழுது
    நீ கொண்டாடி
    நான் பார்த்ததில்லை
    கூடுதலாக
    சில மணி நேரங்கள்
    அடுக்களைக்குள்
    சிறை வைக்கப்
    படுவதை தவிர்த்து
    வேறெதையும்
    அப் பண்டிகைகள்
    உனக்கு வழங்கியதில்லை,

    என்னை வயிற்றில்
    சுமந்ததால்
    நீ இழந்த
    எல்லா சந்தோஷங்களையும்
    உனக்கு திருப்பித் தர
    பேராசைக் கொள்கிறேன்,

    உன்னை தோள்களில்
    சுமப்பதன் மூலமாய்...

    அம்மா உனக்கு
    மறுபிறப்பு உண்டென்றால்
    என் மகளா வந்துவிடு
    மறுபேச்சு பேசாம...

    ReplyDelete

Popular Posts