காதல் கவிதை-12

காதல் கவிதை

kathal kavithai for your loved one
kathal kavithai

1. Kathal kavithai

மறக்காமல் நினைக்கிறேன் -
உன்னை ........ 
நினைக்கவே மறக்கிறேன் -
என்னை.... 

2. Kathal kavithai


அணைத்துக்கொண்டு 

அருகில் இருப்ப‌து ம‌ட்டும‌ல்ல‌ காதல்....

நினைத்துக்கொண்டு
தொலைவில் இருந்தால் கூட‌ காத‌ல் தான்....
என் காத‌லும் அது போல‌த்தான்...


3. Kathal kavithai


நீ என்னதான் 

காயங்கள் கொடுத்தாலும்

உன்னை தவிர வேறு 
யாரையும் பிடிக்காது...!!




4. Kathal kavithai


வழியேதும் இருந்தால் சொல்லுங்கள்

என் வலிகளைச்சொல்ல...!

"கண்" அழகுக் கண்மணியவள்
கண் கலங்கும் வேளையெல்லாம்
நொருங்கி நொருங்கி
நெகிழ்ந்தும் வெந்தும்
வேதனைத்தீயில் வெந்தபடி
வெறுமையாய் நானும்
என் இதயமும்.....


5. Kathal kavithai


மரணமே வந்தாலும்

உன்னை மறக்காத

இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...! மட்டும் அல்ல
உயிராக...! 


6. Kathal kavithai


என்னை பிடிக்கவில்லை என்று

சொல்லி விட்டு ...

யாரை தேடி வந்தாய்
என் கனவில்


7. Kathal kavithai


ஓவியப் போட்டியென்றால்

உன்னை வரைந்து அனுப்பலாம்…

காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான் அனுப்ப
வேண்டும்… 


8. Kathal kavithai


காதல் கொண்ட

மனதுக்கு 

நீ திட்டினாலும் 
காதில் நுழையாது.


9.Kathal kavithai


உள்ளுக்குள் அழுகிறேன்

உன் காதல் தந்த வேதனையால்



வெளியில் சிரிக்கிறேன்

என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக..


உன்னுடன் பழகியது சில காலம்..
உன் நினைவுகளுடன் தொடர்கிறது காலம்


இவை அனைத்தையும் மறக்க
நினைக்கிறேன் ஒரு கணம்


மறு கணம் வேண்டாம் என்கிறது
என் மனம். 


10. Kathal kavithai


நீ விலகி செல்கின்றாய் 

என

நினைக்கும் போதெல்லாம் கோபத்தில்
வார்த்தைகளை கொட்டி விடுகின்றேன்..!!
அதற்குள் ஒழிந்திருக்கும் 
என் காதலின்
ஆழத்தை நீ உணர
மாட்டாயா..?
என்று மனது தவித்தாலும்
உரிமை இல்லாத 
உறவு நீ
என்று உணர்த்துகின்றது..
எங்கோ ஓர் மூலையில் உனக்கான என் காதல்...


11. Kathal kavithai


எவ்வளவு

எடுத்து சொன்னாலும்.....

நீ என்னை
புரிந்து கொள்வதாய் தெரியவில்லை.....
என் பிரிவு தான்
அதை உனக்கு
உணர்த்தும் என்றால்....
எனக்கு பிரிவதிலும்
தயக்கமில்லை.....
நீயே முடிவு செய்.....
புரிந்து கொள்வாயா.....
இல்லை பிரிய செல்வாயா...?


12. Kathal kavithai


என் மரணத்தில் சுமக்கும் 

அத்தனை வலிகளையும் 

உன் மௌனத்தில் சுமக்கின்றேன்...!
என்னோடு பேசிவிடு .


13. Kathal kavithai


இன்னொரு பிறவி

வரை உன்னையே

நேசிப்பேன் என்
உயிர்
பிரிகின்றபோதும்
உன்னையே
சுவாசிப்பேன்.


14. Kathal kavithai


உன் அன்பை பத்திரமாக

என் இதயத்தில் வைத்து இருந்தேன்..

பின்புதான் தெரிந்து கொண்டேன்
உன் அன்புதான்
என் இதயத்தை
பத்திரமாக
வைத்திருக்கிறது என்று.. !!


15. Kathal kavithai


அவளுக்கு நான் கொடுக்க 

வைத்திருந்த மலர் கூட வாடவில்லை

வருவாள் என்ற நம்பிக்கையில் 
எங்கே வாடினால் என் 
மனமும் வாடிவிடும் என்று 
அதுவும் காத்திருக்கிறது..

No comments:

Post a Comment

Popular Posts