அம்மா -தாயின் அன்பு



i love you AMMA

i love you AMMA
வலியோடு பெற்றெடுத்தாய் 
விழி போல காத்தாய் ! 

பாசம் ஊட்டி வளர்த்தாய் ! 
பத்திரமாய் காத்தாய் ! 

சித்திரம்போல் படைத்தாய் ! 
சிந்தைக்கு அறிவூட்டி வளர்த்தாய் ! 

சிப்பி போல இருந்தாய் 
"முத்தை " வெளியே கொணர்ந்தாய் ! 

உறக்கமெல்லாம் துறந்தாய் ! நான் 
உறங்கும் அழகு பார்த்து ரசித்தாய் ! 

வீரத்தை முலைப்பாலோடு சேர்த்துதான் 
ஊட்டி வளர்த்தாய் ! 

நிற்க சொல்லிக்கொடுத்தாய் ! 
நிமிர்ந்து நடக்க கற்றுக்கொடுத்தாய் ! 

மூத்த மகன் என்" முத்து " கடைசிவரை 
என்ன காப்பாத்த போற என் சொத்துனு 
ஊரெல்லாம் சொல்லி அழகு பார்த்தாய் ! 

எனக்கு பிடிச்ச கருப்பட்டி பணியாரம் 
அடிக்கடி செஞ்சு எனக்கு ஊட்டி ,நான் பசியாற 
நீ பட்டினிகிடந்தாய் ! 

ஊரெல்லாம் "கருவா பய ,கருப்பட்டி னு" 
பட்டப்பெயர் வச்சாலும் நீ "கருப்புவைரம்" னு 
கூப்பிட்டு என்னை சிரிக்க வைத்தாய் 

ஒரே ஒரு சேலை எடுத்து கொடுத்ததுக்கு 
ஊரெல்லாம் பெருமை பேசி வந்தாய் ! 

"பாண்டி" கோயிலுக்கு கூட்டிப்போயி 
பாண்டி அய்யா உன்பேர் வச்சு இருக்கேன் 
பத்திரமா என் புள்ளைய பாத்துக்கன்னு 
இன்னமும் தான் வேண்டிக்கிட்டு வார தாயி ! 

உன்ன என் உசுரு உள்ள வரைக்கும் 
என் உசுர போல நல்லா பாத்துக்கிருவேன் 
என் அருமை தாயி ! 


என் அன்பு அம்மா ! 


தாயின் அன்பு

நகரத்தில் நாளெல்லாம் 
நாய்போல உழைத்திட்டு 
நான்கு நாள் விடுப்பெடுத்து 
நான் பிறந்த மண்ணைக் காணச்சென்றேன். 

“ஏன் மெலிந்திருக்கிறாய்...?” என்றாள். 
எதிர் பதிலாக சிரிப்பை உதிர்த்தேன். 
“சரியாக சாப்பிடுவதில்லையா...?” என்றாள். 
சமாளிப்புடன் “பசிப்பதில்லை” என்றேன். 
சாப்பிட பணமில்லை என்று, 
சம்மட்டியால் அடிப்பதற்குப் பதில் 
சாண் வயிற்று பசியை மறைத்திட்டேன்..... 

என்னை பார்த்தாள், 
“எதற்கு என்னை ஏமாற்றுகிறாய்” 
என்றது அவளின் பார்வை. 

“பால், பழம், பருப்பு சாப்பிடு 
பருமனாகி விடுவாய்” என்றாள் அவள் மொழியில்... 
பத்தடித்தூரம் தான் நடந்திருப்பாள் 
பத்துமுறை தடுமாறினாள் 
பரிதவித்துப்போனேன்; 
“பணம் ஐநூறை குறைத்தனுப்பு” என்று 
பாசத்தோடு கட்டளையிட்டாள். 

மூன்றுவேளை இரண்டாகி போனதில் 
மூச்சிரைத்தது எனக்கு 
இரண்டுவேளை ஒன்றாகபோவதில் 
அகமகிழ்ந்தது அவளுக்கு 

உன்னைப் படைத்திட்ட இறைவனும் 
பாசத்தால் பரிதவிப்பான் 
என்னைப் படைத்திட்ட என் தாயே 
அவனையும் என்னுடன் 
நீ பெற்றெடுக்கவில்லை என்பதால்...... 



அம்மா

அம்மா 
அம்மா...... 
உன் அன்பின் 
பரப்பதனில் 
பூமி ஓர் புள்ளியாகும்!. . . 

உன் விழியோர 
ஓர் துளியோ 
ஆழியையே வழியவைக்கும்.. . 

சொர்க்கத்தை 
மடியாக்கி... 
சொல்தன்னை 
வேதமாக்கி.. 
கண்ணிரண்டை 
என்காவலாக்கி 
கதைகூறி வளர்த்திட்டாய். . . 

நான் அழுக நீ சிரிக்க 
ஈன்றெடுத்த அந்நாளன்றி 
என்கண்ணை ஈரமாக்கி 
நீ காண நான் கண்டதில்லை. . . 

தலைமீது குடமேற்றி 
இடுப்போரம் எனை இடுக்கி 
வீசாத கையதனில் 
கூடுதலாய் குடம்பிடித்து 
சுமந்திட்டு நடந்தவளை 
என் எதிர்காலம் தோளேறி 
சேர்ந்திட்டே நெஞ்சழுத்தும். . . 

நான் சுவைத்திட்ட 
மீதமதை 
நீ ருசிக்கக் கண்டதுண்டு 
உனக்கென்றே உணவுதன்னை 
ஓர் நாளும் 
சமைத்தரியாய். . . 

ஊரெல்லாம் பஞ்சம்வர 
போட்டவிதை முளை மறுக்க 
வறட்டுப் பொங்கலுக்கு 
வாண்டு என்னை 
குதூகலிக்க 
நெஞ்சோரம் விஞ்சிநின்ற 
மாங்கல்யத்தை 
மஞ்சளாக்கி 
சேட்டுக்கடை சேர்த்துவிட்டு 
பூட்டுவித்தாய் புத்தாடை. . . 

என் ஓர்துளி 
இரத்தமதை 
சிறுகாயம் சொட்டிவிட 
உன் தலைமுட்டி 
கண்ணீரால் 
உடுப்பெல்லாம் 
ஊறவைத்தாய். . . 

உன்வயிற்று பள்ளமது 
என் முகம் பார்த்து 
நிரம்பிவிடும்... 
என் நினைவே 
உன் நெஞ்சமெலாம் 
தூளி கட்டி விளையாடும்.. . 

நானென்று ஏதுமில்லை 
நீயேயன்றி மீதமில்லை 
என்மூச்சாய் நீ இருக்க 
எங்கே நான் தனித்திருக்க 
கடவுளை கண்டு தொழ 
கனவிலும் ஆசை இல்லை 
உன் முகம் கண்ட கண்ணில் 
கடவுளும் வெறும் கற்பனையே!. . . . . 

அம்மா

அம்மா என்ற  வார்த்தையில் 
 அகிலம்  அடங்குதடி. 
பாசத்தின் அகராதி நீயடி... 
கடவுளின் கருணை நீயடி... 
பெண்மையின் சிறப்பு நீயடி..

வாழ்க்கை அத்தியாயம்

வாழ்க்கை அத்தியாயம்
எனது துன்பமே பெரிதென எண்ணி, எனது மன உணர்வுகளை அறிய யார் உள்ளாரென்று நினைத்து தனித்து நின்ற போது உணர்ந்தேன் என்னை விட அளவில்லா துன்பக்கடல் அழ்ந்துக் கொண்ட கரையேறத் துடிக்கும் மக்களின் மன உணர்வுகளை... 

அன்னை பூமியாம் தமிழ்நாடு... 
தனது அன்னையை பிச்சை எடுக்க விடுவாராம் தெருவோடு... 
உள்ளம் சுருங்கி விட்டதாம் தன் மனைவி, மக்களோடு... 
இதைவிடவும் சுருங்கிவிடுகிறதாம் சிலருக்கு தன்னோடு... 
என்று தான் வாழ்வதாம் அன்போடு?... 
என்ற ஏக்கதோடு 
நாளும் வாழ்கிறோம் துன்பத்தோடு... 

கை ஏந்தியவரிடம் இல்லையென்று கூற மனம் வராது பையில் இருப்பதைப் பங்கிட்டே இயலாதோர் நலம் பேண இன்முகத்தோடு அளித்து ஆதரவில்லாதோருக்கு ஆதரவளித்துக் கண்ணீர் துடைத்து 
வாழ்ந்து, தன்னையே பலரும் பின்பற்ற ஒரு முன்னுதாரணமாய் அமைய வேண்டும் என்றே சித்தம் சிந்திக்க அதற்காக உழைக்கும் வழியில் நேர்மை தவறாது பொய்மை கலவாது புறப்பட்டுவிட்டேன் காலமென்னும் முடிவில்லா குறிப்பேட்டில் நல்லதொரு வாழ்க்கை அத்தியாயம் எழுத....

No comments:

Post a Comment

Popular Posts