முல்லா கற்ற இசை

முல்லா கற்ற இசை

முல்லாவுக்கு சங்கீதம் கறறு;க் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது. சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார். ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா என முல்லா அவரிடம் கேட்டார்.

சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் என்றார் பாட்டு வாத்தியார்.
நான் என்ன கட்டணம் தரவேண்டும்? என்று முல்லா கேட்டார்.

முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் என்றார் பாட்டு வாத்தியார்.

சரி வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா. ஏன் புறப்பட்டு விட்டீர்கள் சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா என பாட்டு வாத்தியார் கேட்டார்.

ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தரவேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.  

No comments:

Post a Comment

Popular Posts